முதல்முறை சிஎஸ்கேவுக்கு வந்தப்போ... தோனி, டீம் ஓனர்ஸ் என்னை ட்ரீட் பண்ண விதம் இருக்கே! சிஎஸ்கேவில் இப்படியும் நடக்குமா? - ஜடேஜா பேச்சு! 1

சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் வீரர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை தான் கொடுப்பார்கள்? சிறிய வீரர் முதல் சீனியர் வீரர் வரை எப்படி நடத்துவார்கள்? என்று பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் ஜடேஜா 2012 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் பயணித்து வருகிறார். கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிஎஸ்கே அணியில் இருந்து வந்த ஜடேஜாவிற்கு 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

முதல்முறை சிஎஸ்கேவுக்கு வந்தப்போ... தோனி, டீம் ஓனர்ஸ் என்னை ட்ரீட் பண்ண விதம் இருக்கே! சிஎஸ்கேவில் இப்படியும் நடக்குமா? - ஜடேஜா பேச்சு! 2

முதல் 8 போட்டிகள் கேப்டன் பொறுப்பு வகித்த ஜடேஜா, எதிர்பார்த்த வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இதனால் தாமாகவே முன்வந்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார். மீண்டும் தோனியே அந்த பொறுப்பை ஏற்று விளையாடினார்.

அந்த நிகழ்விற்கு பிறகு, சிஎஸ்கே அணிக்கும் ஜடேஜா-விற்கும் இடையே பனிப்போர் நிலவியது என்கிற பேச்சுக்கள் அடிபட்டன. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

முதல்முறை சிஎஸ்கேவுக்கு வந்தப்போ... தோனி, டீம் ஓனர்ஸ் என்னை ட்ரீட் பண்ண விதம் இருக்கே! சிஎஸ்கேவில் இப்படியும் நடக்குமா? - ஜடேஜா பேச்சு! 3

ஜடேஜா, இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் பெரிதளவில் பங்களிப்பை கொடுக்க முடியவில்லை என்றாலும், பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜடேஜா, சிஎஸ்கே அணி குறித்தும், அணியின் உரிமையாளர்கள் வீரர்களை நடத்தும் விதம் குறித்தும் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜடேஜா பேசியதாவது:

“சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் வீரர்கள் அன்றைய போட்டியில் எவ்வளவு மோசமாக செயல்பட்டிருந்தாலும் பார்த்துக் கொள்வார்கள். ஏற்றத்தாழ்வு இருக்காது. அணுகுமுறை ஒருபோதும் மாறாது. 11 வருடங்களாக இந்த அணியில் பயணித்து வருகிறேன். முதல்நாள் வந்தபோது எப்படி என்னை பார்த்துக் கொண்டார்களோ, இப்போதும் அதே அணுகுமுறையை என்னிடம் கடைபிடிக்கிறார்கள்.

முதல்முறை சிஎஸ்கேவுக்கு வந்தப்போ... தோனி, டீம் ஓனர்ஸ் என்னை ட்ரீட் பண்ண விதம் இருக்கே! சிஎஸ்கேவில் இப்படியும் நடக்குமா? - ஜடேஜா பேச்சு! 4

சிஎஸ்கே அணியை பொருத்தவரை மூத்த வீரர்கள் இளம் வீரர்கள் என்ற பாகுபாடு ஒருபோதும் கிடையாது. அண்டர்-19 வீரருக்கும் அணியின் மூத்த வீரருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கொடுக்கப்படும். இது வேற எந்த அணிகளும் பார்க்க முடியாது. எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கப்படாது. மேலும் எந்த வீரரிடமும் பாரபட்சம் காட்டப்படாது.

ரசிகர்களும் அதே அன்பை எங்களுக்கு திருப்பிக் கொடுக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்கே மைதானத்தின் ஒரு ஸ்டாண்ட் முழுவதும் ரசிகர்கள் வருகிறார்கள். ஒரு சில பயிற்சி நாட்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததை என்னால் மறக்க முடியாது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. தோனி இங்கு வந்திருக்கிறார். இந்த சீசன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான். இந்த சீசன் கலை கட்டப்போகிறது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *