இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு பலம் பெற்றுள்ளது; சச்சின் டெண்டுல்கர் பெருமிதம் !! 1
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு பலம் பெற்றுள்ளது; சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இதுவரை இல்லாத அளவுக்கு முழுமை பெற்ற வேகப்பந்துவீச்சு நம்மிடம் இருக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு 3 மாத சுற்றுப்பயணம் சென்றுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. அந்நாட்டு அணியுடன் ஒருநாள், டி20, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு பலம் பெற்றுள்ளது; சச்சின் டெண்டுல்கர் பெருமிதம் !! 2

இந்நிலையில், முன்னாள் இந்திய அணியன் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி குறித்து சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பார்த்தவரையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் முழுநிறைவு பெற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் அணியாக இப்போது திகழ்கிறது. என்னுடைய கண்ணோட்டத்தில் இப்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருக்கிறது. வீரர்களும் பல்வேறு விதங்களில் அற்புதமாகப் பந்துவீசுகிறார்கள்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு பலம் பெற்றுள்ளது; சச்சின் டெண்டுல்கர் பெருமிதம் !! 3

நம்முடைய அணிகளில் தற்போது, ஸ்விங் பவுலர் புவனேஷ் குமார், உயரமான பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாட முடியாத அளவுக்கு வேகமாகப் பந்துவீசக்கூடிய பும்ரா, கையில் இருந்து வேகமாகப் பந்து வெளியேறும் வகையில் பந்துவீசக்கூடிய உமேஷ் யாதவ் ஆகியோர் என நல்ல கலவையில் பந்துவீச்சாளர்கள் அமைந்திருக்கிறார்கள்.

இந்த பந்துவீச்சாளர்களில் சிலர் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு நிலைத்து ஆடும் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இதில் புவனேஷ் குமார் ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டி அனைத்தும் தன்னை மாற்றிக்கொண்டு பந்துவீசும் திறமை படைத்தவராக இருக்கிறார். தங்களை 3 விதமான போட்டிகளுக்கும் இருவரும் தங்களை சமன் செய்து கொள்வது சிறப்பாகும்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு பலம் பெற்றுள்ளது; சச்சின் டெண்டுல்கர் பெருமிதம் !! 4

எந்தமாதிரியான கலவையில் வீரர்கள் களமிறங்க வேண்டும் என்று நான் கூற இயலாது. அந்தச் சூழலுக்கு ஏற்றார்போல், எதிரணியைப் பொருத்து அணி நிர்வாகமும், கேப்டனும்தான் எப்படிப்பட்ட வீரர்கள் களமிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் ஸ்விங் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் கலந்து இருக்கும் வகையில் இருக்கலாம். அந்தவகையில் நாம் வீரர்களைத் தேர்வு செய்யலாம்.

நம்முடைய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் முக்கியமான கட்டங்களில் ஓரளவுக்கு ரன்கள் சேர்க்கக்கூடிய வீரர்கள் இருப்பது சிறப்பாகும். இதுபோன்ற பங்களிப்புதான் நம்மையும், அணியையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *