யாரு வேணாம்னு சொன்னது...? நீங்களும் 4 மைதானம் கட்டிக்கங்க; தேவையற்ற கேள்விக்கு சரியான பதில் கொடுத்த ரோஹித் சர்மா !! 1

ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் பலம் என்ற கருத்திற்கு ரோஹித் சர்மா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கான ஐபிஎல் தொடரையும் இந்தியாவில் முழுமையாக நடத்த முடியாமல் போனது. கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டாலும், அதன் தாக்கம் தற்போது சற்று குறைந்துள்ளதால், இந்த வருடத்திற்கான அனைத்து போட்டிகளும் இந்தியாவிலே நடைபெற உள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் மும்பையில் உள்ள ஆடுகளங்களில் மட்டும் வைத்து நடத்தப்படுகிறது.

யாரு வேணாம்னு சொன்னது...? நீங்களும் 4 மைதானம் கட்டிக்கங்க; தேவையற்ற கேள்விக்கு சரியான பதில் கொடுத்த ரோஹித் சர்மா !! 2

அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெறுவதால், மற்ற அணிகளை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் பலம் கிடைக்கும், மும்பை அணியை மும்பை மைதானத்தில் விளையாட அனுமதிப்பது சரியான முறையல்ல என்ற கருத்து நிலவி வருகிறது. சில அணிகள் இதனை பகிரங்கமாகவே வெளிப்படுத்தின.

யாரு வேணாம்னு சொன்னது...? நீங்களும் 4 மைதானம் கட்டிக்கங்க; தேவையற்ற கேள்விக்கு சரியான பதில் கொடுத்த ரோஹித் சர்மா !! 3

இந்தநிலையில், இந்த கருத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சரியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் ரோஹித் சர்மா பேசுகையில், “பல அணிகள் நாங்கள் மும்பை ஆடுகளங்களில் விளையாடுவதற்கு எதிர்பு தெரிவிக்கின்றன, ஆனால் நாங்கள் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிகள், தங்களது ஊரில் 3-4 மைதானங்கள் கட்டி கொள்ள வேண்டியது தானே” என்று பதில் கொடுத்துள்ளார்.

முன்னதாக ரோஹித் சர்மா இது குறித்து அளித்த மற்றொரு பேட்டியில், “இந்த வருட ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள், மும்பை ஆடுகளங்களில் பெரிதாக பரிட்சயம் இல்லாதவர்கள். நானும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொலார்ட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் மட்டுமே மும்பை ஆடுகளில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளோம், மற்றவர்கள் யாரும் அவ்வளவாக விளையாடவில்லை. நாங்களுமே கிட்டத்தட்ட 2 வருடங்களாக மும்பையில் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. மற்ற அணிகள் கூட கடந்த வருட தொடரில் மும்பை மைதானங்களில் விலையாடின, ஆனால் எங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே மும்பையில் நடைபெறுவதால் எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற வாதமே தவறானது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *