இந்தியா – இலங்கை போட்டியின் போது பெட்டிங் காரணமாக 4 பேர் கைது

தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கபடும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இதன் 8வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் போது சோதனை நடத்திய டெல்லி போலீஸார், பெட்டிங்கில் ஈடுபட்டதால் நகரத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து நான்கு பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்.

டெல்லியில் உள்ள கேஷவ் புறம் என்னும் நகரில் விடுதியில் தங்கியிருந்ததாக போலீஸ் கூறினார்கள். டிஜிட்டல் ஊடங்கங்கள் மூலம் பெட்டிங் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பெறும் டெல்லியில் தான் தங்கியிருக்கிறார்கள் என போலீஸ் துணை ஆணையாளர் மிலிந் மஹாதேவ் கூறினார். அவர்கள் லலித் குமார் (39), விஜய் குமார் (47), துர்கா பிரசாத் (47) மற்றும் ராஜு குப்தா (47). 39 தொலைபேசிகள், லேப்-டாப்ஸ் மற்றும் தொகை 40,000 ரூபாய் பறிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இலங்கை:

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை. முதலில் விளையாடிய இந்தியா 321 ரன் எடுத்தது. 322 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை, தொடக்கம் முதலே பந்துகளை பறக்கவிட்டனர். இதனால், 8 பந்துகள் மீதம் இருக்க 322 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.