இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையடவுள்ளது.
இதற்க்காக தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தது.
தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தது. இந்தியாவுடன் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்திலும் (நவ.11, 12-ந்தேதி) விளையாட உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இலங்கை வீரர்கள் இன்று பிற்பகலுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தோனி அந்த ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் வீரர்கள் அணியும் கிரிக்கெட்டின் வெள்ளை உடை அணிந்து காணப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்றார் தோனி. அன்றிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.