புனே: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணியில், வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா தான் தோனியின் செல்லப்பிள்ளை என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் ரைசிங் புனே அணி, கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்கிய நாள் முதல் ஒவ்வொரு சர்ச்சையாக தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் , அணி நிர்வாகம் சார்பாகவும், தனியார் பெட்ரோல் நிறுவனம் சார்பாக ஜாலியாக ஒரு கேள்வி போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்டோக்ஸ், ரகானே,தோனி பங்கேற்றனர். இவர்களிடம் கேட்கப்பட்ட அதிகமான கேள்விகளுக்கு, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸே சரியாக பதில் அளித்தார்.
ரகானே விடை தெரியாமல் முழித்தவண்ணம் இருந்தார். தோனி, பெரும்பாலான கேள்விகளுக்கு கேலியாக பதில் தெரிவித்தார். அதில் ஒரு கேள்வியாக, உங்கள் அணியின் யாராவது ஒரு வீரருடன் 1 மில்லியன் டாலரை பகிர்ந்து கொள்ளச்சொன்னால், யாருடன் பகிர்ந்து கொள்வீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தோனி,’நான் எதற்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டும். சரி, வேண்டும் என்றால் டிண்டாவை எடுத்துக் கொள்ளுங்கள்.’ என்றார்.