சச்சின் கேப்டனாக இருக்கும் போதே கேப்டனாக்கப்பட்ட கங்குலி: 20 வருடங்களுக்குப் பிறகு வெளியான செய்தி 1

சச்சின் நல்ல கேப்டனா என்பதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான மதன் லால் பதில் அளித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சச்சின் சிறந்த கேப்டனல்ல என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. தன்னுடைய ஆட்டத்தில் அவர் அதிகக் கவனம் செலுத்தியதால் அணியைப் பார்த்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார்.

ஒரு கேப்டனாக நீங்கள் மட்டும் சரியாக விளையாடினால் போதாது, இதர 10 வீரர்களிடமிருந்தும் சிறந்த ஆட்டத்திறனைக் கொண்டு வரவேண்டும். அணியை எப்படிக் கவனிக்கிறீர்கள் என்பது முக்கியமானது.சச்சின் கேப்டனாக இருக்கும் போதே கேப்டனாக்கப்பட்ட கங்குலி: 20 வருடங்களுக்குப் பிறகு வெளியான செய்தி 2

கிரிக்கெட் ஆட்டத்தின் நுணுக்கங்கள் பற்றி சச்சின் நன்கு அறிவார். ஒரு வீரர் எங்குத் தவறு செய்கிறார், எப்படிப் பந்துவீச வேண்டும் என்பது பற்றி அவருக்குத் தெரியும் என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் சிக்கினார். 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 5 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதும் அடங்கும்.

2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கிய அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். 74 வயதான ஸ்டீவ் பக்னர் கூறியதாவது:-சச்சின் கேப்டனாக இருக்கும் போதே கேப்டனாக்கப்பட்ட கங்குலி: 20 வருடங்களுக்குப் பிறகு வெளியான செய்தி 3

தெண்டுல்கருக்கு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் நான் தவறுதலாக அவுட் கொடுத்திருக்கிறேன். எந்த நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வது கிடையாது. 2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் தெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தேன்.

பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதும், நான் தவறிழைத்ததும் உணர்ந்தேன். இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரசாக் வீசிய பந்தில் தெண்டுல்கர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன்.சச்சின் கேப்டனாக இருக்கும் போதே கேப்டனாக்கப்பட்ட கங்குலி: 20 வருடங்களுக்குப் பிறகு வெளியான செய்தி 4

ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. ஈடன்கார்டனில் அதுவும் இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது.

இத்தகைய தவறுகளால் நான் வேதனைக்கு உள்ளானேன். நானும் மனிதன் தானே. தவறு செய்வது மனிதனின் இயல்பு. தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மனிதன் வாழ்வின் ஒரு பகுதி தான். இப்போதுள்ள டி.ஆர்.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நடுவரின் நம்பிக்கையை பாதிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.சச்சின் கேப்டனாக இருக்கும் போதே கேப்டனாக்கப்பட்ட கங்குலி: 20 வருடங்களுக்குப் பிறகு வெளியான செய்தி 5

ஆனால் துல்லியமான தீர்ப்புகளை வழங்குவதில் அது உதவிகரமாக இருப்பதை அறிவேன். நான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கி அது தவறான தீர்ப்பு என்று உணர்ந்தால் அன்றைய இரவில் சரியாக தூக்கம் வராது. அந்த நினைப்பால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த தொந்தரவுகள் இருக்காது.

இவ்வாறு பக்னர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *