இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் சர்பராஸ் 1

இந்திய அணியுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது சொன்னார்.

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

 

இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் சர்பராஸ் 2
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறும்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது நடந்து முடிந்த கதை. அது முடிந்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. அதனால் அந்த போட்டியுடன் இதை தொடர்புபடுத்த விரும்பவில்லை. அடுத்து நடக்கும் போட்டியை மட்டுமே கவனத்தில் வைத்திருக்கிறோம். இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான். இந்த தொடரில் பங்கேறும் ஆறு அணிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீதோஷண் நிலை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் சொந்த ஊரில் விளையாடுவது போன்றே இங்கும் விளையாட முடியும்.

இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன் சர்பராஸ் 3
Pakistan’s bowler Shaheen Shah Afridi (2R) celebrates with teammates including captain Sarfraz Nawaz (2L) after taking a wicket during the fifth T20 cricket match between Pakistan and Australia of a T20 tri-series including host nation Zimbabwe at The Harare Sports Club in Harare on July 5, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA

வெளிச்சத்துக்கு கீழ் விளையாடுவது கடினம் என்று சோயிப் மாலிக் கூறியிருப்பது பற்றி கேட்கிறார்கள். இங்கு சூடான சீதோஷ்ணநிலை இருக்கும். கஷ்டம்தான். இருந்தாலும் சிறப்பாக விளையாட முடியும். முதலில் பேட்டிங் செய்தால் இங்கு நாங்கள் 300 ரன்களுக்கு மேன் எடுப்போம்.

 

போட்டிக்கு அணியின் உத்வேகம் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதே உத்வேகத்துடன் தொடர் முழுவதும் ஆடினோம். அதை தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக தொடரில் கையாண்டோம். அந்த உத்வேகம் இந்த தொடரிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவோம். அணியில் சில வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படாதது பற்றி கேட்கிறார்கள். அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்படுபவர்கள்தான். உலகக்கோப்பை வரை இன்னும் அதிகமான கிரிக்கெட் காத்திருக்கிறது. அந்த தொடர்களில் அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்’ என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *