ரிசப் 7 கேட்ச், ராகுல் 7 கேட்ச் - 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்யாத சாதனை 1

நடியபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ரிசப் பான்ட் ஆகியோர் ஆளுக்கு 7 கேட்சுகள் பிடித்து 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்ய முடியாத சாதனனையை செய்துள்ளனர்.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றுபெரும் நிலையில் உள்ளது.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் கோலி 97 ரன்களும் துணை கேப்டன் ரகானே 81 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.ரிசப் 7 கேட்ச், ராகுல் 7 கேட்ச் - 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்யாத சாதனை 2முண்ணனி வீரர்கள் சொர்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது  இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார். அதன்பின் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 23 ரன்கள் எடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

 

நான்காவது நாளான நேற்று குக் 9 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஜென்னிங்ஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையிலும், குக் 17 ரன்களிலும் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்களிலும், போப் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ரிசப் 7 கேட்ச், ராகுல் 7 கேட்ச் - 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்யாத சாதனை 3

இதனால், 200 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் இணைந்த பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டத்தில் திருப்பத்தை கொண்டுவந்தனர். மிகவும் நிதானமாகவும்,  நேர்த்தியாகவும் விளையாடிய இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இதனால், 41.3 ஓவரில் 100 ரன்களையும், 55 ஓவரில் 150 ரன்களையும் இங்கிலாந்து எட்டியது. ஒரு கட்டம் வரை நிதானமாக ஒன்று இரண்டு ரன்களை மட்டும் எடுத்து வந்த இந்த ஜோடி, பின்னர் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்து விளையாடியது. பட்லர் 93 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

 

ஓவர்கள் செல்ல செல்ல இருவரும் அவுட் ஆவது போலவே தெரியவில்லை. இதனால், இந்திய ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள். இரண்டாவது செஷன் முழுவதும் விக்கெட் விழவேயில்லை. பட்லர் – ஸ்டோக்ஸ் ஜோடி இப்படியே விளையாடினால் இங்கிலாந்து வெற்றி பெரும் நிலை இருந்தது. சிறப்பாக விளையாடிய பட்லர் சதம் அடிக்க ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்லர் – ஸ்டோக்ஸ் ஜோடியின் ஆட்டம் டென்ஷன் எகிற வைத்தது.

ரிசப் 7 கேட்ச், ராகுல் 7 கேட்ச் - 141 வருட கிரிக்கெட் வரலாற்றில் செய்யாத சாதனை 4

இந்த நிலையில்தான், இந்திய ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் நிலைந்து நின்று ஆடிய பட்லரின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அடுத்து வந்த பெர்ஸ்டோவ்வின் விக்கெட்டுகளையும் பும்ரா எடுக்க இங்கிலாந்து அணியின் நம்பிக்கை மெல்ல தகர ஆரம்பித்தது. சரிவில் இருந்து  மீள்வதற்குள்ளாகவே சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோக்ஸயும் 62 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழந்து 311 ரன்கள் சேர்த்தது. ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இன்னும் ஒரு நாள் முழுவதுமாக உள்ள நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணியின் கையில் உள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 210 ரன்கள் தேவை என்பதால் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *