பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி !! 1

பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபாரதம் விதித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி !! 2

பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் டு பிளசிசுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது, மேலும், டு பிளசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி

பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி !! 3

தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா;

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி வென்றது.

பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி !! 4

இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில், 177 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 431 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு வெறும் 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.

பந்துவீச்சில் தாமதம்; டூ பிளசிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி !! 5

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு புரியன் (4) சொதப்பலாக வெளியேறினார். அடுத்து வந்த ஆம்லா (2), காயத்தால் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆனால் எல்கர் கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 1 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என தென் ஆப்ரிக்க அணி முன்னிலை பெற்றது. தவிர, கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றாலும் டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி கைப்பற்றும். இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 11ம் தேதி ஜோகானஸ்பர்க்கில் துவங்குகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *