இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு இடமில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த பின்னர் இந்தியா மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இலங்கை செல்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைத்துள்ளது. கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா அணியுடன் செல்கிறார்.
16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. புஜாரா, 5. ரகானே (துணை கேப்டன்), 6. ரோகித் சர்மா, 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. சகா (விக்கெட் கீப்பர்), 10. இசாந்த் ஷர்மா, 11. உமேஷ் யாதவ், 12. ஹர்திக் பாண்டியா, 13. புவனேஸ்வர் குமார், 14. குல்தீப் யாதவ், 15. முகமது ஷமி, 16. அபிநவ் முகுந்த்.