இந்திய வீரர்கள் யாருமே இல்லை... இந்த உலகக்கோப்பையில் இந்த மூன்று வீரர்கள் தான் பெஸ்ட்; ரிக்கி பாண்டிங் சொல்கிறார் !! 1
இந்திய வீரர்கள் யாருமே இல்லை… இந்த உலகக்கோப்பையில் இந்த மூன்று வீரர்கள் தான் பெஸ்ட்; ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் மூன்று வீரர்களை முன்னாள் ஜாம்பவனான ரிக்கி பாண்டிங் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் அரையிறுதி சுற்றுக்கு அதிகாரப்பூர்மாக தகுதி பெற்றுவிட்டன, எஞ்சியுள்ள இரண்டு இடங்களை பிடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்திய வீரர்கள் யாருமே இல்லை... இந்த உலகக்கோப்பையில் இந்த மூன்று வீரர்கள் தான் பெஸ்ட்; ரிக்கி பாண்டிங் சொல்கிறார் !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று அடுத்த சில தினங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறந்து விளங்கும் மூன்று வீரர்களை முன்னாள் ஜாம்பவனான ரிக்கி பாண்டிங் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “முதலில் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பவாவை தேர்வு செய்ய விரும்புகிறேன். ஆஸ்திரேலிய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் எடுக்காத ஆடம் ஜாம்பா, அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறி வருகின்றனர். முதல் இரண்டு போட்டிகளிலும் விக்கெட் எடுக்காத ஆடம் ஜாம்பா தற்போது அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் முன்னிலையில் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் யாருமே இல்லை... இந்த உலகக்கோப்பையில் இந்த மூன்று வீரர்கள் தான் பெஸ்ட்; ரிக்கி பாண்டிங் சொல்கிறார் !! 3

மேலும் பேசிய ரிக்கி பாண்டிங், “இரண்டாவதாக குவிண்டன் டி காக்கையும், மூன்றாவதாக தென் ஆப்ரிக்கா அணியின் மார்கோ ஜென்சனையும் தேர்வு செய்ய விரும்புகிறேன். உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருக்கும் டி காக் இந்த உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்து வருகிறார். அதே போன்று மார்கோ ஜென்சன் பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணிக்கு வலு சேர்த்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *