முன்னாள் பி.சி.சி.ஐயின் பொது மேளாலர் எம்.வி.ஶ்ரீதர் துரதிர்ஷ்டவசமாக இன்று மதியம் மாரடைப்பால் உயிரிளந்தார்.மார்டைப்பு வந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஶ்ரீதர். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிளந்துவிட்டார்.
கடந்த மாதம் பல பிரச்சனைகளின் காரணமாக பி.சி.சி.ஐயின் போது மேளாலர் பதவியில் இருந்து ராஜினாம செய்தார் எம்.வி.ஶ்ரீதர். இவர் முன்னாள் ஹைதராபாத் அணி வீரர் ஆவார். மேலும் ,ஹைதராபாத்தில் பல கிரிக்கெட் க்ளப்புகளை நடத்தி வருவதாகவும் அதற்க்காக ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ததாகவும் புகார் எழுந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி அறிக்கையின்படி, ஶ்ரீதர் ஹைதராபத்தில் 5 கிரிக்கெட் க்ளப்பிற்கு தலைவராக் இருந்துள்ளார். அவையாவன, விநாயர் கிரிக்கெட் க்ளப், சல்பிகுடா கிரிக்க் க்ளப், கன்சல்ட் கிரிக்கெட் க்ளப், நடராஜ் கிரிக்கெட் க்ளப் மற்றும் சத்யம் கிரிக்கெட் க்ளப்.
மேலும் ,இவர் மீது வழக்கு உள்ளதை பி.சி.சி.ஐயிடம் இருந்து மறைதுள்ளதாக 2014ஆம் ஆண்டு புகார் எழுந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஶ்ரீனிவாசன் பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்தபோது 2013ஆம் ஆண்டு இவர் பி.சி.சி.ஐயின் போது மேளாலராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போதிலிருந்து இந்திய ஆண்கள் மட்டும் பெண்கள் அணியின் நிர்வாக பணிகளையும் உள்ளூர் போட்டிகளின் நிர்வாக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் எம்.வி.ஶ்ரீதர்.
எம்.வி.ஶ்ரீதர் 90களில் ஹைதராபாத் அணியின் மிக்கிய வீரராக இருந்தவர். ஹைதராபாத் அணிக்காக 97 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 6701 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 48 ஆகும். மொத்தம் 21 சதங்களும் 27 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச முதல் தர ரன் 366 ஆகும்.
தற்போது அவருடைய 51 வயதில் மாரடைப்பால் மரணித்துள்ளார். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.