இவர் மனது வைத்தால் தான் ஐ.பி.எல் தொடர் நடக்கும்; இர்பான் பதான் ஓபன் டாக் !! 1

இவர் மனது வைத்தால் தான் ஐ.பி.எல் தொடர் நடக்கும்; இர்பான் பதான் ஓபன் டாக்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் அந்த காலத்தில், ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது சாத்தியமில்லாததாகவே தெரிகிறது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வாக்குறுதி ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இவர் மனது வைத்தால் தான் ஐ.பி.எல் தொடர் நடக்கும்; இர்பான் பதான் ஓபன் டாக் !! 2

இதுகுறித்து பதான் கூறுகையில், “நான் அந்த அறிக்கையை முழுமையாக படித்தேன். அதில் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவது தான் சிறந்தது என தெரிவிக்க முன் வந்துள்ளனர். அனைவரும் இந்த கட்டத்தில், ஐபிஎல் தொடரை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் இருந்து ஐபிஎல் நடக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. இது இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலான கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகச்சிறந்த செய்தி. நானும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக காத்திருக்கின்றேன்.

இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *