2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் காவஸ்கர் நம்புகிறார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சமீபத்திய ஐந்து போட்டிகளில் தொடரை வென்றது.

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதன் மூலம், ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசி 59 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 44 ஐ வென்றுள்ளது.
2011ஆம் ஆண்டு போட்டியை நடத்திய இந்தியா வென்றது. 2015ஆம் ஆண்டு அதேபோல போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா வென்றது.இம்முறை போட்டியை நடத்துவது இங்கிலாந்து அணி . ஆதலால், அவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கவாஸ்கர் தெரிவித்தார்.
இங்கிலாந்து எதிராக அறிமுக போட்டியை ஆடிய கவாஸ்கர், டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட் அணிக்காக 18 உள்ளூர் போட்டிகளை ஆடியுள்ளார் கவாஸ்கர்.
“மேலும், இங்கிலாந்து பெண்கள் அணி, இந்திய பெண்கள் அணியை டி20 போட்டிகளில் வென்றது”

இங்கிலாந்து உயர்மட்டக்குழு கூறுகையில், வருகின்ற சம்மரில், இந்தியாவுடன் மற்ற அணிகளையும் இங்கிலாந்திற்கு வரவேற்று, தொடரை சிறப்பிக்க காத்திருக்கிறோம்.
மே 30 துவங்கி ஜூலை 14 வரை நடக்கும் இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.