நீ யாரா இரு, எவனா இரு... எங்க தல தோனிகிட்ட கரெக்ட்டா இரு - தமிழில் ட்வீட் போட்டு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ஹர்பஜன் சிங்! 1

“நீ யாராக இரு.. எவனாக இரு, தல தோனிகிட்ட கரெக்ட்டா இரு” என்று தமிழில் ட்வீட் போட்டு சிஎஸ்கே-வின் வெற்றியை கொண்டாடியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசியது.

இதனையடுத்து பேட்டிங்கில் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரர் டெவான் கான்வெ 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டர்கள் உட்பட 45 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். இவருக்கு பக்க பலமாக விளையாடி வந்த சிவம் துபே 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டர்கள் உட்பட 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

நீ யாரா இரு, எவனா இரு... எங்க தல தோனிகிட்ட கரெக்ட்டா இரு - தமிழில் ட்வீட் போட்டு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ஹர்பஜன் சிங்! 2

ருத்துராஜ் அவுட்டான பிறகு உள்ளே வந்த ரஹானே, 20 பந்துகளில் 37 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து சென்றதால் சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது.

இதனை சேஞ் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் மஹிபால் இருவரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து தடுமாற்றம் கண்டது. அப்போது ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் டு பிளசிஸ் இருவரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பயம்காட்டினர்.

நீ யாரா இரு, எவனா இரு... எங்க தல தோனிகிட்ட கரெக்ட்டா இரு - தமிழில் ட்வீட் போட்டு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ஹர்பஜன் சிங்! 3

இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 120 ரன்கள் அடிக்க அணியின் ஸ்கோர் 15 ஓவர்களிலேயே 160 ஐ கடந்தது. மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் சு பிளசிஸ் 33 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க  சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

ஆர்சிபி அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நீ யாரா இரு, எவனா இரு... எங்க தல தோனிகிட்ட கரெக்ட்டா இரு - தமிழில் ட்வீட் போட்டு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ஹர்பஜன் சிங்! 4

இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் ஒருபுறம் விமரிசையாக கொண்டாடிவர, முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தனக்கே உரிய பாணியில் தமிழில் ட்வீட் போட்டு தோனியையும் சிஎஸ்கே அணியின் வெற்றியையும் கொண்டாடியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

“மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு “Lion”  கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது #CSK வெற்றி வாசத்துல @ChennaiIPL #CSKVSRCB #IPL #IPL2023″

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *