தோனியை போன்று இந்த பையனால் தான் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும்; பாராட்டி பேசிய ஹர்பஜன் சிங் !! 1

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையாக நாயகனாக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்டியாவால் நிச்சயம் இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ம் தேதி துவங்கியது. இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் பொறுப்பான விளையாட்டின் மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனியை போன்று இந்த பையனால் தான் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும்; பாராட்டி பேசிய ஹர்பஜன் சிங் !! 2

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதற்கு ஹர்திக் பாண்டியா தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. பந்துவிச்சில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் மிக சிறப்பாக செயல்பட்டு கடைசி வரை களத்தில் இருந்ததன் மூலம் இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியமானது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமல்லாமல், கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தோனியை போன்று இந்த பையனால் தான் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும்; பாராட்டி பேசிய ஹர்பஜன் சிங் !! 3

அந்தவகையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், தோனியை போன்று ஹர்திக் பாண்டியாவாலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமல்லாமல் கேப்டன்சியில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் கேப்டனாக ஆக வேண்டும்; அவர் கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் தன்னைப் பற்றிய ஒரு வித்தியாசமான அம்சத்தைக் காட்டியுள்ளார். அவர் ஒரு எம்.எஸ் தோனி மாதிரியான ஒரு வீரராக மாறிவிட்டார். அவர் மிகவும் அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்து, அதிரடிக்குத் திரும்பியிருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் அவர் தனது சுபாவத்தை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. முன்னோக்கி செல்லும் தேசிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து திறன்களையும் அவர் பெற்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *