எவன்டா சொன்னது? நான் மும்பையை விட்டு போறேனு? : பாண்டியா ஆவேசம் 1

இந்தியன் ப்ரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடர்களின் முதல் 10 சீசன் முடிந்துள்ள நிலையில் வரும் வருடத்தின் 11ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. கடந்த வருடங்களைப் போல் தேவையில்லாத வீரர்களுக்கு மட்டும் இந்த ஏலம் நடக்கப் போவதில்லை. இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் 3 வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவர்.

எவன்டா சொன்னது? நான் மும்பையை விட்டு போறேனு? : பாண்டியா ஆவேசம் 2
Bengaluru: Mumbai Indians player Hardik Pandya during a practice session at Chinnaswamy Stadium in Bengaluru on May 10, 2016. (Photo: IANS)

 

அப்படி ஏலத்தில் விடப்படும் வீரர்கள் வேறு அணிக்கு செல்லவும், முன்னர் ஆடிய அணியில் கிடைத்த பண மதிப்பை விட அதிக மதிப்பிற்கு ஏலத்திற்கு போகவும் வாய்ப்புள்ளது. இதனை வைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹர்திக் பாண்டிய ஏலத்திற்கு போவதாக செய்திகள் வந்தது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரூபாய் 10 லட்சத்திற்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் இந்த பொது ஏலத்தில் ஏலம் சென்றால் இன்னும் அதிக தொகைக்கு ஏலம் போகலாம் எனவே அவர் வேறு அணிக்கு போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவித்தன. பாண்டியா போன்று ஒரு இந்தியாவின் அதிரடி ஆல் ரவுண்டர் ஏலத்தில் போனால், குறைந்தது ரூபாய் 10 கோடிக்காவது ஏலம் போவார் என்பது உறுதி. எவன்டா சொன்னது? நான் மும்பையை விட்டு போறேனு? : பாண்டியா ஆவேசம் 3

தற்போது வேறு அணிக்கு போகவுள்ளதாக வந்த செய்தியை மறுத்துள்ளர் பாண்டியா, இது பற்றி அவர் கூறியதாவது,

இந்த செய்தியை கேட்ட போது எனக்கு மன வருத்தமானது. அந்த செய்தியில் உண்மையில்லை. இந்த மும்பை இந்தியன்ஸ் அணி தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அப்படி இருக்கும் போது அதனை விட்டு நான் ஏன் போக வேண்டும்?

எப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினேனோ அப்போதே எனது வாழ்க்கை மாறிவிட்டது. தற்போது சில சில தோல்விகள் வருகிறது. அது தான் வாழ்க்கை. ஆனால், அங்கு தான் நான் ஒரு தொழில் முறை ஆட்டக்காரன் என்பதை கற்றுக்கொண்டேன். அந்த அணியை விட்டு நான் ஏன் போக வேண்டும்.

எனக் கூறினார் ஹர்திக்

ஹர்திக் பாண்டியா கடந்த 2015 ஆம் ஆண்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக் அறிமுகமானர். அந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் அசத்தினார் பாண்டியா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 31 பந்துகளில் அவர் அடித்த 61 ரன் அனைவரது பார்வையையும் அவர் பக்கம் திருப்பியது.எவன்டா சொன்னது? நான் மும்பையை விட்டு போறேனு? : பாண்டியா ஆவேசம் 4

பின்னர் சைத் முதாக் அலி ட்ராபியில் அற்புதமாக ஆடிய ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2016 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி என அசத்தி, தனது டெஸ்ட் முதல் டெஸ்ட்டின் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். அதே டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் பாண்டியா. Cricket, India, Sri Lanka, Virat Kohli, Hardik Pandya, Ben Stokes

இப்படி பார்க்கும் போது, பொது ஏலத்தில் போனால் பல கோடிகளுக்கு ஏலம் போவார். ஏனெனில் இந்தியாவின் ஆல் ரவுண்டர், இந்திய ஆடுகளங்களில் ஆடப்படும் ஐ.பி.எல் தொடரில் பந்துகளை பறக்கவிடுவார் என்பதில் மாற்றம் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *