ரொம்ப திறமையான வீரர்... தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரருக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட் !! 1

சமீபகாலமாக இந்திய அணியில் ரஹானே விளையாடும் விதம் மோசமாகி வருகிறது. கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பிற்கும் குறைவாக விளையாடினார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் நான்கு ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டிக்கு முன்பாகவே இவரது இடம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வந்தது. தற்போது மீண்டும் ஒருமுறை மோசமான பார்மில் விளையாடி இருப்பதால், அடுத்த போட்டியில் இவர் இருப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் மீண்டும் எழுந்திருக்கின்றன.

ரொம்ப திறமையான வீரர்... தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரருக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட் !! 2

முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லாததால், ரோகித் சர்மா அல்லது ரஹானே இருவரில் ஒருவர் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ரஹானே மோசமாக விளையாடி வருவதால், இவரை வெளியில் அமர்த்திவிட்டு ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஆகையால், மீண்டும் ஒருமுறை ரஹானேவிற்கு அந்த வாய்ப்பு சென்றது. இதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

தற்போது, அடுத்த போட்டியில் ரகானே இருப்பாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ரொம்ப திறமையான வீரர்... தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரருக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட் !! 3

ரஹானே ஒரு திறமையான வீரர். பலமுறை இந்திய அணிக்காக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபகாலமாக அவர் நன்கு விளையாட வில்லை என அறிவேன். அவரும் ரன்கள் அடிக்க வேண்டும் என தொடர்ந்து தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவரைப்போன்ற வீரருக்கு ஒரு போட்டி நன்றாக அமைந்தால் போதுமானது. அடுத்தடுத்த போட்டிகளில் அதனை எடுத்துச் செல்வார். இரண்டாவது போட்டியில் அவர் இருப்பாரா மாட்டாரா என்பது குறித்து தற்போது கூற இயலாது. அதற்காக இன்னும் நேரம் இருக்கிறது. விராட் கோலி அணியில் இணைந்த பிறகு இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். போட்டிக்கு சில மணி நேரங்கள் முன்பு யார் அணியில் விளையாடுவர், அணியின் வெற்றிக்கு எது தேவை என்பது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாக பேட்டியளித்திருந்தார்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *