கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த தாய்லாந்து பெண்கள் அணி... 1

தற்போது நடந்து வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் பல ஆச்சர்யம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. முதலில் முன்னாள் பங்களாதேஷ் அணிக்கு இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதல் போட்டியிலேயே இந்தியாவை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி.

கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த தாய்லாந்து பெண்கள் அணி... 2

தற்போது, தாய்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதலில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இலங்கை அணி துவக்கம் சிறப்பாக இருந்த போதிலும் அதது வந்தவர்கள் பெரிதான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஒவ்வொருவராக தாய்லாந்து அணிவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்காமல் விக்கெட்டுகள் இழந்தனர். இறுதியில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தாய்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் லெய்ங்ப்ரஸ்ட் 12 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணியில் அதிகபட்சமாக சஞ்சீவனி 32 ரன்கள் எடுத்திருந்தார்.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இளக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். விக்கெட்டுகள் இழந்தாலும் கடுமையாக போராடி இலக்கை எட்டியது. தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக சாய்வெய் 43 ரன்கள் எடுத்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த தாய்லாந்து பெண்கள் அணி... 3

இறுதியில், 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் வென்று கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *