இந்திய அணியின் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணிக்கான தனது பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.
2021 உலகக் கோப்பை தொடரில் முதல் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் பரிதாபமாக விளையாடி வந்தது, பின் துபாயில் நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக சிறப்பான திட்டத்தை தீட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரராக வெங்கடேஷ் ஐயரை களமிறக்கியது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய வெங்கடேச ஐயர் மிக சிறந்த முறையில் விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியாக இருந்தார், பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் தனது திறமையை வெங்கடேஷ் நிரூபித்தார். இதன் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வெங்கடேஷ் ஐயர் பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தான் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக வெங்கடேச ஐயர் திகழ்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது வெங்கடேச ஐயர் இந்திய அணிக்கான தனது பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர் இங்கிலாந்து அணிக்கு எப்படி பென் ஸ்டோக்ஸ் மிக சிறந்த முறையில் விளையாடி அனைத்து விதமான தொடர்களிலும் வெற்றியை பெற்றுகொடுத்தாரோ அதே போன்று இந்திய அணிக்காக நான் செயல்பட விரும்புகிறேன், அவருடைய விளையாட்டை நான் மெய்சிலிர்க்க பார்த்து ரசிக்கிறேன், அவருடைய பேட்டிங் எந்தளவு சிறப்பாக இருக்கிறதோ அதேபோன்று அவருடைய பந்துவீச்சை மற்றும் பீல்டிங் மிக சிறந்த முறையில் உள்ளது, எந்த அணிக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படாமல் இருக்கும் என்றும் வெங்கடேச ஐயர் அதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.