பொழைக்க தெரிந்த பையன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த சுப்மன் கில் ; ஆசியக் கோப்பையில் தேர்வாகதது குறித்து என்ன கூறினார் தெரியுமா.. !! 1

ஆசியக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நான் திருப்தியாக தான் உள்ளேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

பொழைக்க தெரிந்த பையன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த சுப்மன் கில் ; ஆசியக் கோப்பையில் தேர்வாகதது குறித்து என்ன கூறினார் தெரியுமா.. !! 2

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி, சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.குறிப்பாக நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்ற சுப்மன் கில்லை ஸ்டான்ட்-பை வீரராககூட இந்திய அணி தேர்ந்தெடுக்காதது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொழைக்க தெரிந்த பையன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த சுப்மன் கில் ; ஆசியக் கோப்பையில் தேர்வாகதது குறித்து என்ன கூறினார் தெரியுமா.. !! 3

கடந்த சில மாதங்களாகவே ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத கே எல் ராகுலை அணியில் இணைத்துள்ளீர்கள் ஏன் சுப்மன் கில்லை இணைக்கவில்லை..? என்று இந்திய அணி தேர்வாளர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டதாக சுப்மன் கில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.பொழைக்க தெரிந்த பையன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த சுப்மன் கில் ; ஆசியக் கோப்பையில் தேர்வாகதது குறித்து என்ன கூறினார் தெரியுமா.. !! 4

இதுகுறித்து சுப்மன் கில் தெரிவித்ததாவது, “இது சம்பந்தமாக கேள்வி எழும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அவர்கள் பேசுவதை எல்லாம் நான் கருத்தில் கொள்ளவில்லை. என்னால் அணிக்கு என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன், அணி நிர்வாகமும் அணியின் கேப்டனும் என்னிடம் இருந்து எதை எதிர்பார்ப்பார்களோ அதை செய்வதற்கு தயாராக உள்ளேன், இந்த நிலை சற்று வருத்தம் அளித்தாலும் இது என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு உதவியாக உள்ளது, நான் முழு திருப்தியாக உள்ளேன் முதல் சில போட்டிகளில் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நான் பயிற்சியாளர் ராகுல் டிராவிடிடம் அதிகமாக ‘வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை பற்றியும் மனதை எப்படி நிலைப்படுத்துவது என்பது பற்றியும் பேசிக் கொள்வேன்’, நான் அவரிடம் பேட்டிங் டெக்னிக் பற்றி பேசுவதை விட, போட்டியில் மனஉறுதி குறித்து அதிகம் பேசுவேன்” என்று சுப்மன் கில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *