இதை செய்தால் மட்டுமே ரிஷப் பண்ட்டால் தப்பிக்க முடியும்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்,லிமிடெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கோர் வீரர்களில் ஒருவராக கருதப்படும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்,29 டெஸ்ட் போட்டி, 24 சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் 43 t20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இதை செய்தால் மட்டுமே ரிஷப் பண்ட்டால் தப்பிக்க முடியும்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ள வீரர் என்று கருதப்படும் ரிஷப் பண்ட், லிமிடெட் ஓவர் போட்டிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம் பேசியுள்ளார்.

இதை செய்தால் மட்டுமே ரிஷப் பண்ட்டால் தப்பிக்க முடியும்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

இதுகுறித்து அவர் பேசுகையில், ரிஷப் பண்ட் முன்னேற்றத்தை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம், இந்திய அணியில் அவருடைய மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது, டெஸ்ட் போட்டிகளில் இவருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் மிகவும் அபரீதமாக உள்ளது, ஆனால் என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் லிமிடெட் ஒரு போட்டிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே அவர் ஒரு முழுமையான வீரராக திகழ்வார். ரிஷப் பண்ட் இன்னும் கூடிய விரைவில் மூன்று விதமான தொடர்களிலும் சிறப்பாக செயல்பட துவங்கி விடுவார், இதன் காரணமாக இந்திய அணி வலுவான அணியாக திகழும் என்று சபா கரீம் பேசியுள்ளார்.

இதை செய்தால் மட்டுமே ரிஷப் பண்ட்டால் தப்பிக்க முடியும்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசிய சபா கரீம், முதலில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் சேர்ந்தபின், அவர் இந்திய அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்து தனக்கான வாய்ப்பை உறுதி செய்து கொண்டார், தோனிக்கு முன் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்து, மேட்ச் வின்னராக யாரும் இருக்கவில்லை.தோனி இந்திய அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் எப்படி இருந்தாரோ, அதே போன்று இந்திய அணிக்கு தோனி இருந்தார், என்று தோனி குறித்து சபா கரீம் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *