நாட்வெஸ்ட் ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் கங்குலி இந்தியா வெற்றி பெற்ற பிறகு தன் சட்டையைக் கழற்றி சுழற்றியதை யாரும் மறக்க முடியாது, தன்னாலும் மறக்க முடியாது என்கிறார் அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன்.
கிரிக்கெட் இன்சைடு அவுட் என்ற நிகழ்சிக்காக இயன் பிஷப் மற்றும் எல்மா ஸ்மிட்டிடம் நாசர் ஹுசைன் பேசும்போது, “இந்தியாவுக்கு எதிரான 2002 நாட்வெஸ்ட் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமான அல்லது எனக்கு அவ்வளவாக பிடிக்காத போட்டி என்று இரட்டை மனநிலையை ஏற்படுத்திய போட்டி.
அந்தத் தலைமுறையில் அந்தப் போட்டி மிகப்பெரிய ஒருநாள் போட்டியாகும். இந்தியா இறுதிப்போட்டிக்கு நீண்டகாலமாக தகுதி பெறாமலே இருந்தது. இறுதியில் தோல்வி அடைவது போல்தான் இருந்தனர்.
அதேபோல அவரின் நேரம் தவறும் தன்மைக்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நசீர் ஹூசைன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கங்குலிக்கு எதிராக ஆடுவதை நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே எதிர்கொண்டுள்ளேன். நான் எப்போதும் கூறிவருவது என்னவெனில் கங்குலிதான் இந்திய கிரிக்கெட் அணியை கடினமாக்கினார். அதற்கு முன்னதாக சேர்ந்து விளையாட மிகவும் மென்மையான வீரர்களாக இருந்தனர். சவுரவ்தான் உறுதியான அணியாக அதை மாற்றினார்.
அதுவும் இறுதியில் வென்ற பிறகு சட்டையைக் கழற்றி சுழற்றினாரே, அதுதான் சவுரவ் கங்குலியின் முத்திரை. நான் அவரது மிகப்பெரிய விசிறி” என்றார் நாசர் ஹுசைன்.
ஆனால் தற்போது கிரிக்கெட் கமெண்ட்ரிக்காக நான் அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவர் எவ்வளவு அமைதியானவர் என்பது தற்போதுதான் தெரிகிறது. ஆனால் தற்போதும் அவர் நேரம் தவறிதான் வருகிறார்” என்று பேசியுள்ளார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் பற்றி பேசிய அவர் “ சச்சினை ஆட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்கு நாங்கள் பலமுறை முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் அவர் மிகவும் நுட்பமான திறமை கொண்டவர். அவரை அவுட் ஆக்குவதற்கு எங்கள் அணியினர் களத்தில் எத்தனை முறை கூடியிருப்போம் எனத் தெரியவில்லை”என்று பேசியுள்ளார்.