இந்திய வீரர்களின் தற்பொழுது ரவீந்திர ஜடேஜா மிக சிறப்பாக மைதானத்தில் பீல்டிங் செய்வதில் வல்லவர். அவரது பீல்டீங் மூலம் பல ரன்கள் இந்திய அணிக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது. தற்பொழுது அவரிடம் தொடர்ச்சியாக மிகவும் வெற்றிகரமாக எப்படி பீல்டிங் செய்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தனது தரப்பு விளக்கத்தை கூறியிருக்கிறார்.
நான் வலைபயிற்சியில் அதிகமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டேன்
அது பற்றிக் கூறியுள்ள ரவிந்திர ஜடேஜா, வலை பயிற்சி மையத்தில் நான் எப்பொழுதும் பெரிதாக பயிற்சி எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் வலைபயிற்சி மையத்தில் காயம் அடைவதை விட , விளையாட்டு மைதானத்தில் காயம் அடைவது தான் சரி என்று கூறியுள்ளார்.

அதன் காரணமாகவே இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம், எப்பொழுதும் தனக்கு பீல்டிங் குறித்த பயிற்சியில் மிக கம்மியான பயிற்சியை வழங்குமாறு முன்கூட்டியே கூறி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மைதானத்தில் தான் எப்பொழுதும் இயல்பான நின்று அந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டுமோ அவ்வாறு செயல்பட்டு பீல்டிங் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
நான் எனது தோள்பட்டைகளில் அதிக உடற்பயிற்சி செய்வேன்
மேலும் இது சம்பந்தமாக கூறியுள்ள ரவீந்திர ஜடேஜா, மற்ற வீரர்களை விட தான் எப்பொழுதும் முன்கூட்டியே ரியாக்ட் செய்வதாகவும் அதன் காரணமாகவே வெகு சீக்கிரமாக பாய்ந்து கேட்ச் பிடிப்பது அல்லது பந்தை ஸ்டெம்பை நோக்கி விரைவது என தனது செயல்பாடு வேகமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் வேகமாக பந்துகளை வீச தனது தோள்பட்டையை சம்பந்தமான உடற்பயிற்சியை அதிக அளவில் செய்து வருவதாகவும், அது தனக்கு மைதானத்தில் மிகப்பெரிய அளவில் உதவி புரிந்து வருவதாகவும் கூறி இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.