சதம் அடித்து அசத்திய தோனி, ராகுல்; கொண்டாடும் ரசிகர்கள் !! 1

சதம் அடித்து அசத்திய தோனி, ராகுல்; கொண்டாடும் ரசிகர்கள்

வங்கதேச அணியுடனான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பையின் 10வது பயிற்சிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பங்களதேஷ் இடையே நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் போட்டி தொடங்குவதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் 10 நிமிடங்களில் போட்டி தொடங்கியது.

சதம் அடித்து அசத்திய தோனி, ராகுல்; கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 1 ரன்களிலும், ரோஹித் சர்மா 19 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் கோஹ்லி 47 ரன்களும், தோனி 113 ரன்களும், கே.எல் ராகுல் 107 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 359 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து தோனி மற்றும் கே.எல் ராகுலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 1 ரன்களிலும், ரோஹித் சர்மா 19 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் கோஹ்லி 47 ரன்களும், தோனி 113 ரன்களும், கே.எல் ராகுல் 107 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 359 ரன்கள் எடுத்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *