இவர் இருக்கும் போது ரஹானேவுக்கு எதுக்குடா டீம்ல இடம் கொடுத்தீங்க...? கேள்வி எழுப்பும் முரளி கார்த்திக் !! 1
இவர் இருக்கும் போது ரஹானேவுக்கு எதுக்குடா டீம்ல இடம் கொடுத்தீங்க…? கேள்வி எழுப்பும் முரளி கார்த்திக்

டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவிற்கு இடம் கொடுத்தது ஏன் என முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன.

இவர் இருக்கும் போது ரஹானேவுக்கு எதுக்குடா டீம்ல இடம் கொடுத்தீங்க...? கேள்வி எழுப்பும் முரளி கார்த்திக் !! 2

கடந்த வருட டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கான இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றிருந்த இந்திய அணி, இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற டி.20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை என அனைத்தையும் தவறவிட்ட இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்சிப்பையாவது கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஐபிஎல் நிறைவடைந்த பிறகு இந்திய வீரர்கள், இங்கிலாந்திற்கு செல்ல உள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை, பிசிசிஐ., கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இவர் இருக்கும் போது ரஹானேவுக்கு எதுக்குடா டீம்ல இடம் கொடுத்தீங்க...? கேள்வி எழுப்பும் முரளி கார்த்திக் !! 3

இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஜெயதேவ் உனாத்கட், உமேஷ் யாதவ், கே.எஸ் பாரத், ஷர்துல் தாகூர் ஆகியோருடன், அஜின்கியா ரஹானேவிற்கும் பிசிசிஐ., இடம் கொடுத்துள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியுடன் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ரஹானே, கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளி கார்த்திக், ஹனுமா விஹாரி இருக்கும் பொழுது ரஹானேவிற்கு இடம் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் இருக்கும் போது ரஹானேவுக்கு எதுக்குடா டீம்ல இடம் கொடுத்தீங்க...? கேள்வி எழுப்பும் முரளி கார்த்திக் !! 4

இது குறித்து முரளி கார்த்திக் பேசுகையில், “ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. அணியில் இடம்பெறுவதற்கு தேவையான அனைத்தையும் ஹனுமா விஹாரி மிக சரியாகவே செய்து வருகிறார். ரஹானே சிறந்த பேட்ஸ்மேன், பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார் என்பதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. நான் அவரது ரசிகன், ஆனால் ஹனுமா விஹாரிக்கு முக்கியத்தும் கொடுக்காமல் ரஹானேவை டீமில் எடுத்துள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹனுமா விஹாரி எந்த தவறும் செய்யவில்லை, அவர் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார். இருந்த போதிலும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ஏன் என்று தான் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *