உலகளவில் சிறந்த 4 கிரிக்கெட் வீரர்கள் என்ற தரவரிசையில் நான் ரோஹித் ஷர்மாவையும் இணைத்துக் கொள்வேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக உலக கிரிக்கெட் அரங்கில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவர் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி, மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சபா கரீம் ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சியில் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் இந்த இரு இரண்டு முன்னாள் வீரர்களிடமும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த டெஸ்ட் வீரர்களாக திகழும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய வீரர்களில் ஒருவரை நீக்கிவிட்டு எந்த வீரரை இணைத்துக் கொள்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு முதலில் பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி, “என்னிடம் நீங்கள் மிகவும் கடினமான கேள்வி கேட்டு விட்டீர்கள், ஆனால் என்னைப் பொறுத்தவரை இதற்கு மிகவும் தகுதியானவர் ரோகித் சர்மாதான், ஏனென்றால் ரோஹித் சர்மா தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதில் திறமையானவர், ரோகித் சர்மாவா..? பாபர் அசாமா..?: என்று கேட்டால் நான் ரோஹித் சர்மாவை தான் கூறுவேன், ஏனென்றால் ரோகித் சர்மா தற்போது சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை வெற்றியின் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார், பாபர் அசாம் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆனால் இருவரில் சிறந்தவர் ரோஹித் தான் என்று ரிதிந்தர் பேசியிருந்தார்.

பின் அடுத்ததாக பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சபா கரீம், தலைசிறந்த டெஸ்ட் வீரர்கள் என்று இருக்கும் ‘பேப்4’ (fabulous 4) என்ற வரிசையில் கூடுதலாக ஒரு வீரரை இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் அந்த வீரர் பாபர் அசாம் தான், ஏனென்றால் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று சபா கரீம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.