மேட்ச் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள இதனால தான் தோத்துட்டோம்னு கதற ஆரம்பித்த ஆஸ்திரேலியா! சர்ச்சையில் அகமதாபாத் பிட்ச் - ரிப்போர்ட்! 1

அகமதாபாத் மைதானத்தின் பராமரிப்பாளர் செய்த காரியத்தை பார்த்து இப்போதே கதற ஆரம்பித்திருக்கின்றனர் ஆஸ்திரேலியா அணியினர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் கடைசி டெஸ்ட் போட்டியை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே மைதானத்தின் பிட்ச் குறித்த சர்ச்சையை முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே நிகழ்ந்து வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பிட்ச் பராமரிப்பாளரிடம் தங்களுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்து விளையாடியது தான் என்று விமர்சித்தனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னரும் இதே விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் போட்டியில் வெற்றி பெற்றதால் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டனர்.

மேட்ச் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள இதனால தான் தோத்துட்டோம்னு கதற ஆரம்பித்த ஆஸ்திரேலியா! சர்ச்சையில் அகமதாபாத் பிட்ச் - ரிப்போர்ட்! 2

தற்போது மீண்டும் ஒருமுறை நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பிட்ச் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் ஏற்கனவே பயிற்சியை துவங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் இந்திய அணியும், எப்படியாவது சமன் செய்ய வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் இருக்கிறது.

4வது டெஸ்ட் போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்தின் பராமரிப்பாளர்கள் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள பிட்ச்சிற்கு தண்ணீர் ஊற்றுவது மற்றும் சில பராமரிப்பு வேலைகளை செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது. இதை பிடித்துக் கொண்ட ஆஸ்திரேலியா அணியினர் மற்றும் ரசிகர்கள் பலர், இந்திய அணி மீண்டும் வேலையை காட்டுகிறது. பிட்ச்சை தங்களுக்கு சாதகமாக தயார் செய்து வெற்றி பெற முயற்சிக்கிறது என்று கதறலை வெளிப்படுத்த தொடங்கினார்.

மேட்ச் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள இதனால தான் தோத்துட்டோம்னு கதற ஆரம்பித்த ஆஸ்திரேலியா! சர்ச்சையில் அகமதாபாத் பிட்ச் - ரிப்போர்ட்! 3

ஏற்கனவே அகமதாபாத் பராமரிப்பாளர் சில பத்திரிக்கைகளிடம், “ரோகித் சர்மா மற்றும் குழுவினர் பிட்ச் விவகாரத்தில் எந்தவித தலையிடும் செய்யவில்லை. முந்தைய போட்டிகளுக்கு எப்படி மைதானம் தயாரானதோ, அதேபோல பேட்டிங் பவுலிங் இரண்டும் எடுபடும் அளவிற்கு பிட்ச் தயார் செய்யப் போகிறோம்.” என தெளிவாக பேசினார்.

அதன்பிறகும் ஆஸ்திரேலியா அணியினர் இப்படி சர்ச்சையை கிளப்புவது போட்டிக்கு முன்னரே அவர்களது தோல்வியை ஒப்புக்கொண்டது போல இருக்கிறது என்று இந்திய ரசிகர்கள் விட்டுக்கொடுக்காமல் விமர்சிக்கின்றனர்.

மேட்ச் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள இதனால தான் தோத்துட்டோம்னு கதற ஆரம்பித்த ஆஸ்திரேலியா! சர்ச்சையில் அகமதாபாத் பிட்ச் - ரிப்போர்ட்! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *