ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 1
ரொம்ப பாவம்… சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர்

சஞ்சு சாம்சனுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று இந்தியா அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்

தேர்வாளர்களால் புறக்கணிக்கபட்ட சஞ்சு சாம்சன் ..

மோசமாக விளையாடிய வீரர்களை எல்லாம் அணியில் வைத்துவிட்டு சிறப்பாக விளையாடும் வீரர்களை அணியிலிருந்து வெளியே வைப்பதையே இந்திய அணி வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று விமர்சிக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சனின் நீக்கம் ரசிகர்கள் உட்பட முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 2

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு வரை டி20 போட்டியில் விளையாடி வந்த சஞ்சு சம்சனை ஆசிய கோப்பையில் இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கு பின் நடைபெற்ற உலகக்கோப்பையிலும் இவரை தேர்ந்தெடுக்கவில்லை.

மோசமாக விளையாடும் வீரர்களை எல்லாம் அணியில் வைத்துவிட்டு சஞ்சு சாம்சன் போன்ற ஒரு அதிரடி வீரரை அணியில் இணைக்காமல் போனது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று கடுமையான விமர்சனம் டி20 தொடரில் சஞ்சு சாம்சனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 3

அப்பாடா… ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்து விட்டார் என்று மனதை அமைதிபடுத்தினால்…அவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு கடுமையாக விமர்சித்தனர்.

காயத்தால் வெளியேறிய சஞ்சு சாம்சன்..

இதனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட சஞ்சு சாம்சனக்கு இடம் கிடைத்தது, ஆனால் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பீல்டிங் செய்யும் பொழுது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் விளையாட முடியாமல் போய்விட்டது, காயம் குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் சஞ்சு சாம்சன் தற்பொழுது குணமாகி விளையாடுவதற்கு தயாராகி விட்டார் என தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.

ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 4

இதனால் சஞ்சு சம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய தேர்வாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்:ராபின் உத்தப்பா..

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சஞ்சு சம்சனுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று இந்தியா அணிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 5

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், “சஞ்சு சாம்சனக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதில் 100% எந்த ஒரு கேள்வியும் எழாது, ஏனென்றால் சஞ்சு சாம்சன் அதிக திறமை வாய்ந்த ஒரு தரமான வீரர், ஆனால் அவருக்கு இதுவரை போதுமான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அவரை மூன்றாவது இடத்திலோ அல்லது ஐந்தாவது இடத்திலோ பேட்டிங் செய்ய வைத்தால் அவருக்கு குறைந்தது ஐந்து வாய்ப்புகளாவது கொடுக்க வேண்டும்.

ரொம்ப பாவம்... சஞ்சு சாம்சனுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க; கோரிக்கை வைக்கும் முன்னாள் வீரர் !! 6

“அவருக்கு இரண்டு முழு தொடர்களில் பங்கேற்று விளையாட்டு வைத்து பரிசோதனை செய்ய வேண்டும் அதில் அவர் சரியாக செயல்படவில்லை என்றால் அவர் இந்திய அணிக்கு லாயக்கு படமாட்டார் என்று கூறலாம், ஆனால் அது எதுவுமே செய்யாமல் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து விட்டு அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று அடுத்த போட்டியில் நீக்கினால் அது சரியான முறை கிடையாது, இது பார்ப்பவர்களுக்கு தவறான செய்தியாக சென்று விடும், எனவே சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *