2 டெஸ்ட் ஜெயிச்ச திமிர் மட்டுமே இந்தியாவை தோற்கடித்தது; 3வது டெஸ்டில் இன்னும் சீக்கிரமா ஆஸ்திரேலியாவ முடிக்க பாத்தீங்க, அவங்க நம்மள முடிச்சிட்டு போய்ட்டானுங்க - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடல்! 1

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம் என்ற மமதையில் இருந்த இந்தியாவிற்கு தக்க பாடம் கிடைத்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இரண்டிலும் வெற்றி பெற்றது.

2 டெஸ்ட் ஜெயிச்ச திமிர் மட்டுமே இந்தியாவை தோற்கடித்தது; 3வது டெஸ்டில் இன்னும் சீக்கிரமா ஆஸ்திரேலியாவ முடிக்க பாத்தீங்க, அவங்க நம்மள முடிச்சிட்டு போய்ட்டானுங்க - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடல்! 2

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றார். ஆனால் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கிறது என்று கணித்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த முடிவு இந்திய அணிக்கு பின்னடைவை தந்துவிட்டது.

பேட்ஸ்மேன்கள் நிறைய ஷாட்டுகள் அடிக்க முயற்சித்து அது தவறாக முடிந்ததால் ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 76 ரன்கள் மட்டுமே சேஸ் செய்ய வேண்டிய தேவை இருந்ததால் எளிதாக ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வென்று விட்டனர்.

2 டெஸ்ட் ஜெயிச்ச திமிர் மட்டுமே இந்தியாவை தோற்கடித்தது; 3வது டெஸ்டில் இன்னும் சீக்கிரமா ஆஸ்திரேலியாவ முடிக்க பாத்தீங்க, அவங்க நம்மள முடிச்சிட்டு போய்ட்டானுங்க - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடல்! 3

இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விக்கு மிகமுக்கிய காரணம், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றியின் மமதை தான் என்று கடுமையாக தனது விமர்சனத்தை முன்வைத்து பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

“இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றியின் தாக்கத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினர். ஆதிக்கம் செலுத்தவும் முயற்சித்தனர். அதன் எதிரொலியாக டாஸ் வென்ற ரோகித் சர்மா முதல் முறையாக இந்த தொடரில் பேட்டிங் எடுத்தார்.”

“இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா பவுலர்களை விரைவாகவே தாக்குதல் நடத்தி ரன் குவிக்கலாம் என்ற முனைப்பில் சில ஷாட்கள் விளையாடினர். ஆனால் பிட்ச் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது என்பதை கணிக்கவில்லை. அதன் காரணமாக தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.”

2 டெஸ்ட் ஜெயிச்ச திமிர் மட்டுமே இந்தியாவை தோற்கடித்தது; 3வது டெஸ்டில் இன்னும் சீக்கிரமா ஆஸ்திரேலியாவ முடிக்க பாத்தீங்க, அவங்க நம்மள முடிச்சிட்டு போய்ட்டானுங்க - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாடல்! 4

“இந்தூர் மைதானத்தின் பிட்ச் நமக்கு தெரிந்தது தானே என்ற கணிப்பில் விளையாடியது தவறாக முடிந்து விட்டது. இதுதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய தோல்வியையும் தந்திருக்கிறது.” என்று விமர்சித்திருக்கிறார் சஞ்சய் மஞ்சு ரேக்கர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *