இப்படியொரு தங்கத்த டீம்ல வச்சுக்கிட்டு, தகரத்த பிளேயிங் லெவன்ல எடுத்துட்டு இருக்கீங்க இந்திய வீரர்களே - சுட்டிக்காட்டிய டேனிஷ் கனேரியா! 1

சூரியகுமார் யாதவை பிளேயிங் லெவனில் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் இருப்பது அவசியம் என சுட்டிக்காட்டி பேசியுள்ளார் டேனிஷ் கனேரியா.

மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துவிட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சமீபத்தில் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது.

இப்படியொரு தங்கத்த டீம்ல வச்சுக்கிட்டு, தகரத்த பிளேயிங் லெவன்ல எடுத்துட்டு இருக்கீங்க இந்திய வீரர்களே - சுட்டிக்காட்டிய டேனிஷ் கனேரியா! 2

இந்திய அணிக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கம் என்பது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் சொதப்பலான முறையில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆகையால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் வெளியில் அமர்த்தப்பட்டு சுப்மன் கில் பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட்டார்.

கில், இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆட்டம் இழந்த விதம் ஏமாற்றத்தை கொடுத்தது. ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் கில் மீது அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் யார் துவக்க வீரராக இருப்பார்? மற்றும் சற்று சொதப்பலாக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் உள்ளே எடுத்து வரப்பட வேண்டும் என்கிற கருத்துக்களை முன்வைத்து சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

இப்படியொரு தங்கத்த டீம்ல வச்சுக்கிட்டு, தகரத்த பிளேயிங் லெவன்ல எடுத்துட்டு இருக்கீங்க இந்திய வீரர்களே - சுட்டிக்காட்டிய டேனிஷ் கனேரியா! 3

“இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் நன்றாக ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது.”

“அகமதாபாத் மைதானத்தில் சூரியகுமார் யாதவ் நன்றாக விளையாடியுள்ளார். அவரை பிளேயிங் லெவனில் கொண்டுவர பரிசீலனை செய்யலாம். ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் இரண்டையும் விளையாடக்கூடியவர். அகமதாபாத் போன்ற மைதானத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆலோசனை செய்யலாம்.”

“இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை 3 டெஸ்டில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தூர் மைதானத்தில் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியபோது, இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை கீழ் வரிசையில் விளையாடும் பேட்ஸ்மேன்களை நம்பி களமிறங்குவது முட்டாள்தனமான முடிவாக இருக்கும்.”

இப்படியொரு தங்கத்த டீம்ல வச்சுக்கிட்டு, தகரத்த பிளேயிங் லெவன்ல எடுத்துட்டு இருக்கீங்க இந்திய வீரர்களே - சுட்டிக்காட்டிய டேனிஷ் கனேரியா! 4

சுப்மன் கில் இப்போது கத்தி முனையில் இருப்பதைப் போல உணர்வார். அணி நிர்வாகம் அவரது அணுகுமுறையில் அதிருப்தியில் இருப்பது தெரிகிறது. கேஎல் ராகுலை அமரவைத்துவிட்டு இவரை விளையாட வைத்திருக்கிறார்கள். கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒருமுறை கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை கட்டாயம் பெரிய ஸ்கோராக அவர் மாற்ற வேண்டும். இல்லையேல் அதிரடியாக விளையாடக்கூடிய இஷான் கிஷனுக்கு வாய்ப்புகள் கொடுத்துப் பார்க்கலாம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *