உள்ளூர் போட்டில விளையாட கூட லாயக்கு இல்ல... இந்திய வீரரை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 1
உள்ளூர் போட்டில விளையாட கூட லாயக்கு இல்ல… இந்திய வீரரை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் வீரர்

பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வரும் ஷர்துல் தாகூரை முன்னாள் இந்திய வீரரான டோடா கணேஷ் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

உள்ளூர் போட்டில விளையாட கூட லாயக்கு இல்ல... இந்திய வீரரை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 2

மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 17 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 4 போட்டியிலும் அபார வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியில் சில குறைபாடுகளும் இருந்தே வருகின்றன. குறிப்பாக பந்துவீச்சில் சில குறைபாடுகள் இருக்கின்றன. இந்திய அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்ள இருப்பதாலும், அடுத்தடுத்த போட்டிகள் மிக முக்கியமானது என்பதாலும், இந்திய அணி திருத்தி கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்ளூர் போட்டில விளையாட கூட லாயக்கு இல்ல... இந்திய வீரரை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான டோடா கணேஷ், ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் தடுமாறி வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டோடா கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் தடுமாறி வருகிறார். அவரது தடுமாற்றத்தை வைத்து பார்த்தால் உள்ளூர் போட்டிகளுக்கான கர்நாடகா அணியின் ஆடும் லெவனில் கூட அவருக்கு இடம் கிடைக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *