ரொம்ப ஈசியா ஜெயிச்சிருக்கலாம்... ஆனா..? இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஜாஸ் பட்லர் வேதனை !! 1
ரொம்ப ஈசியா ஜெயிச்சிருக்கலாம்… ஆனா..? இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஜாஸ் பட்லர் வேதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரொம்ப ஈசியா ஜெயிச்சிருக்கலாம்... ஆனா..? இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஜாஸ் பட்லர் வேதனை !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக தடுமாறியது. குறிப்பாக முகமது ஷமி மற்றும் பும்ராஹ் ஆகியோரின் பந்துவீச்சில் சிக்கி இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் வெறும் 129 ரன்களுக்கே ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்தது.

ரொம்ப ஈசியா ஜெயிச்சிருக்கலாம்... ஆனா..? இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; ஜாஸ் பட்லர் வேதனை !! 3

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், படுதோல்வியடைந்துள்ளது மிகுந்த வேதனையை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில், “இந்திய அணியுடனான இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 230 ரன்களை எட்டுவது இலகுவானது தான் ஆனால் அதை கூட நாங்கள் செய்யவில்லை. இது நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. மற்ற போட்டிகளை விட இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம், இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி இந்திய வீரர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தினோம். இந்திய அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி எங்கள் மீது ஏற்படுத்திய அழுத்தத்தை நான் எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என நினைத்தேன், ஆனால் என்னாலும் அதை செய்ய முடியவில்லை. எஞ்சியுள்ள போட்டிகளிலாவது சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *