பாகிஸ்தான் அணியை வச்சு செய்யபோகும் 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்…
ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி எதிர்கொள்ளும் முக்கிய தொடராக இந்த தொடர் இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் பாகிஸ்தான் மற்றும் இந்திய இடையிலான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால்,இந்த போட்டியில் நடைபெறும் சுவராஸ்யமான சம்பவம் குறித்து அதிகப்படியான தகவல்கள் வெளியாகிய நிலையில் உள்ளது.
இதில் பாகிஸ்தான் அணியை ஒற்றையாளாக சமாளிக்க கூடிய திறமை படைத்த மூன்று இந்திய வீரர்கள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்…
ரிஷப் பண்ட்
சமகால கிரிக்கெட் தொடரின் அதிரடி பேட்ஸ்மெனாக கருதப்படும் ரிஷப் பண்ட் முதல் பந்திலிருந்து அடித்து ஆடும் திறமை படைத்தவர்.
தற்போது நல்லா பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட், பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒற்றையாளாக அதிரடி பேட்டிங் செய்து சமாளிக்க கூடிய திறமை படைத்தவர்.