இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி இரண்டு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
ராஜ்கோட்டில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ரபாடா மற்றும் பர்னல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவர்களுக்கு பதிலாக டி காக் மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் ஹென்ரிக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிகிடி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த போட்டிகளை போன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
நான்காவது டி.20 போட்டிக்கான இந்திய அணி;
ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஸ் கான்.
நான்காவது டி.20 போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி;
டெம்பா பவுமா, டி காக், ராசி வண்டர் டூசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டூவைன் ப்ரெடோரியஸ், கேசவ் மஹராஜ், மார்கோ ஜென்சன், லுங்கி நிகிடி, தப்ரைஸ் சம்சி, அன்ரிக் நோர்கியா.