ரிஷப் பண்ட்
2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமான ரிஷப் பண்ட் மூன்று விதமான தொடர்களில் இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இருந்தபோதும் இந்த மூன்று வருடங்களில் இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை, வருகிற ஒருநாள் தொடர் தான் ரிஷப் பண்டிர்க்கு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியாகும்.
