19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் வங்காள தேசம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி காலிறுதி போட்டியில் இந்தியா – வங்காள தேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சுப்மன் கில் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அபிஷேக் ஷா அரைச்சதம் அடித்தார். கேப்டன் பிரித்வீ ஷா 40 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் கார்வீக் தேசை 34 ரன்கள் அடித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இஷான் போரல் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கமலேஷ் நாகர்கோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவம் மாவி, அபிஷேக் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனுகூல் ராய் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளம் தேசம் அணி 42.1 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பியாக் கோஷ் 43 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோபியூல் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவின் கமலேஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, இந்திய அணி வருகின்ற 30-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.