ரோகித்து.. பலே ஆளுயா நீ; குஜராத் டெஸ்டுக்கு தரமான இரண்டு வீரர்களை இறக்கி சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா; யார் அந்த 2 வீரர்கள்? - கசிந்த தகவல்! 1

அகமதாபாத் டெஸ்ட்-க்கு இரண்டு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளதாக அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் கசிய விடப்பட்டிருக்கிறது. இரண்டு வீரர்களும் குஜராத் கண்டிஷனை நன்கு உணர்ந்தவர்கள் என்ற தகவல்களும் வந்திருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தற்போது 2-1 என்ற கணக்கில் இந்திய அணியின் பக்கம் இருக்கிறது.

நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வருகிற மார்ச் 9ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இருநாட்டின் பிரதமர்களும் இப்போட்டியை பார்க்க வருகின்றனர். இதற்கான ஆயத்த பணிகள் ஒருபுறம் நடக்கின்றன. ரோகித்து.. பலே ஆளுயா நீ; குஜராத் டெஸ்டுக்கு தரமான இரண்டு வீரர்களை இறக்கி சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா; யார் அந்த 2 வீரர்கள்? - கசிந்த தகவல்! 2

இரு அணிகளுக்கும் 4வது டெஸ்ட் போட்டி மிக முக்கியமானதாகும். இந்திய அணி தோல்வியுற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். ஆஸ்திரேலியா அணி தோல்வியுற்றால், தொடர்ச்சியாக 2017, 2018, 2021 மற்றும் தற்போது நடக்கும்  டெஸ்ட் தொடர் என  வரிசையாக நான்கு முறை பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணியிடம் இழக்கும். இத்தகைய மோசமான தோல்வியை தவிர்க்க, வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பு ஆஸ்திரேலியா அணியும் களமிறங்கும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்றதால், 4வது டெஸ்டில் இந்திய அணியை மீண்டும் வெற்றிப்பாகைக்கு கொண்டு வர ரோகித் சர்மா பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக இரண்டு மாற்றங்களை பிளேயிங் லெவனில் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.

ரோகித்து.. பலே ஆளுயா நீ; குஜராத் டெஸ்டுக்கு தரமான இரண்டு வீரர்களை இறக்கி சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா; யார் அந்த 2 வீரர்கள்? - கசிந்த தகவல்! 3

கேஎஸ் பரத் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷான் கிஷன் உள்ளே எடுத்துவரப்பட இருக்கிறார். அடுத்ததாக, குஜராத் மைதானத்தில் கண்டிஷன் பற்றி நான்கு அறிந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட இருக்கிறார். இவர் முகமது சிராஜ்க்கு பதிலாக உள்ளே வருகிறார் என தெரிய வந்திருக்கிறது.

ரோகித்து.. பலே ஆளுயா நீ; குஜராத் டெஸ்டுக்கு தரமான இரண்டு வீரர்களை இறக்கி சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா; யார் அந்த 2 வீரர்கள்? - கசிந்த தகவல்! 4

மேலும் சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரில் யார் ஓப்பனிங் செய்வார் என்கிற சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து கண்டிஷனில் நன்றாக விளையாடக்கூடிய கேஎல் ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *