அஸ்வின நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ;அனுதாபத்தை தேர்வித்த முன்னாள் வீரர் !! 1

இந்திய அணி தேர்வாளர்கள் அஸ்வினின் பொன்னான காலத்தை வீணாக்கி விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படக்கூடிய திறமை படைத்த இந்திய அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின், 2010 ஆம் ஆண்டு சர்வதேச இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தார்.அஸ்வின நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ;அனுதாபத்தை தேர்வித்த முன்னாள் வீரர் !! 2

தனக்கு உரித்தான ஸ்டைலில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்த தமிழக வீரர் அஸ்வினை, 2017க்கு பிறகு இந்திய அணி ஓரம் கட்ட துவங்கி விட்டது.

 

மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணி தேர்வாளர்கள், அஸ்வினை லிமிடெட் ஓவர் தொடர்களிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு டெஸ்ட் தொடர்களில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

அஸ்வின நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ;அனுதாபத்தை தேர்வித்த முன்னாள் வீரர் !! 3

அவ்வப்போது லிமிடெட் ஓவர் தொடர்களில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதையெல்லாம் சரியாகவே பயன்படுத்தி வந்தாலும், தேர்வாளர்கள் இவரை லிமிடெட் ஓவர் போட்டியில் விளையாட வைப்பது கிடையாது.

மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் திறமை படைத்த இவரை ஏன் இந்திய அணி வீணடிக்கிறது என்று அவ்வப்போது கேள்வி எழும் சமயத்தில், அனைவரது கேள்விக்கும் பதில் அளிப்பது போல் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, பின் மீண்டும் லிமிடெட் ஓவர் தொடரிலிருந்து அஸ்வினை இந்திய அணி புறக்கணித்து கொண்டு தான் வருகிறது.

அஸ்வின நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ;அனுதாபத்தை தேர்வித்த முன்னாள் வீரர் !! 4

இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி இடம் பெற்றிருக்கும் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா.. அல்லது கிடைக்காத என்ற சந்தேகம் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.

 

இந்த சமயத்தில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் இந்திய அணி, நட்சத்திர வீரர் அஸ்வினின் காலத்தை வீணடித்து விட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அஸ்வின நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ;அனுதாபத்தை தேர்வித்த முன்னாள் வீரர் !! 5

இதுகுறித்து முஸ்தாக் பேசுவையில், “அஸ்வினை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏன் அவரை லிமிடெட் ஓவர் போட்டிகளிலிருந்து நீக்குகிறார்கள் என்பது இதுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அஸ்வினின் பொன்னான நேரத்தை வீணடித்து விட்டார்கள். அஸ்வின் ஒரு மிகச்சிறந்த ஆள்ராவுண்டர், அதேபோன்று பந்துவீச்சில் இரண்டு வகையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் விக்கெட்டை வீழ்த்துவார் ஆனால் ரண்களை கோட்டை விட்டுவிடுவார், ஒரு சிலர் ரண்களை கட்டுப்படுத்துவார் ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறுவார். ஆனால் அஸ்வினிடம் இந்த இரண்டு திறமையுமே உள்ளது, அஸ்வினின் விஷயத்தில் இந்திய அணி தேர்வாளர்கள் பாரபட்சமாக நடக்கின்றார்கள் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், தற்பொழுது ஆசிய கோப்பையில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார் இதற்கு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரின் முயற்சிதான் காரணம் இது இந்திய அணி எடுத்திருக்கும் சரியான முடிவாகும்” என்று முஸ்தாக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *