முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான்
புனேவில் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, முதல் போட்டியில் வென்று 40 புள்ளிகளுடன் பட்டியலில் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
நாளை தொடங்கும் போட்டியிலும் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டால் தொடரை வெல்லலாம்.
விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் விராட் கோலி, ராஹனே, விருதிமான் சாஹா, ஹனுமா விஹாரி ஆகியோர் முழுமையாக திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை. இவர்களுக்கு வேலை கொடுக்காத வகையில் முதல் இன்னிங்ஸில் மயங்க் அக்ரவாலின இரட்டை சதம், ரோஹித் சர்மாவின் சதம் ஆகியவையும், 2-வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் சதம், புஜாராவின் ஆட்டம் ஆகியவையும் எளிதாக ரன்களைப் பெற்றுக்கொடுத்தன.
பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். 2-வது இன்னிங்ஸில் முகமது ஷமி தனது ஸ்விங் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். அவருக்குத் துணையாக ரவிந்திர ஜடேஜாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார்கள்.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக அறிமுகமாவதற்கு ரோஹித் சர்மா பொருத்தமானவரா இருப்பாரா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு மத்தியில் ரோஹித் சர்மா தனது இரு சதத்தால் பதில் அளித்தார். நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா அதே ஃபார்முடன் தொடர்வார் என நம்பலாம்.
அதே போல் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர்கள் யூனிட்டை பலப்படுத்தும் விதமாக உமேஷ் யாதவ்விற்கு அணியில் இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி;
ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், விராட் கோஹ்லி, புஜாரா, ரஹானே, சஹா, ரவிசந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா.