எப்டி இருந்த பையன், இப்பா வேற லெவல் ஆகிட்டான்;இளம் வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக் !! 1

அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயரை வெகுவாக பாராட்டிய தினேஷ் கார்த்திக்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என இலங்கை அணியை வாஷ் அவுட் செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

எப்டி இருந்த பையன், இப்பா வேற லெவல் ஆகிட்டான்;இளம் வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக் !! 2

இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு மிக முக்கியமான வீரரின் ஒருவராக பார்க்கப்படுபவர் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர்.இவர் இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் பங்கேற்று 203 ரன்கள் அடித்து மேன் ஆப் தி சீரியஸ் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

கடந்த வருடம் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் பங்கு கொள்ள முடியவில்லை, பின் இரண்டாம் பாதியில் பங்கேற்று விளையாடிய இவர் முன்புபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.இதனால் 2021 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வாய்ப்பு கிடைத்தும் விளையாட முடியவில்லை.

எப்டி இருந்த பையன், இப்பா வேற லெவல் ஆகிட்டான்;இளம் வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக் !! 3

அதற்குப்பின் மிகவும் கடின முயற்சி செய்து தற்பொழுது மரண பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி வருகிறார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்கள் பலர் இல்லாத நிலையில், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஸ்ரேயாஸ் அய்யர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

எப்டி இருந்த பையன், இப்பா வேற லெவல் ஆகிட்டான்;இளம் வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக் !! 4

அதில்,“ஸ்ரேயாஸ் ஐயரின் கடந்தகால வாழ்க்கை நமக்கு தெரியும், காயங்களிலேயே மிகவும் மோசமான காயங்களில் ஒன்றாக கருதப்படும் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் உலக கோப்பை தொடருக்கான ஆடும் 11 வாய்ப்பும் இவருக்குக் கிடைக்கவில்லை, அதற்குப் பின் கடுமையான பயிற்சி செய்து மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்,தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்து அசத்தினார். பின் அடுத்தடுத்த போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்” என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *