இங்கிலாந்து தொடருக்கு எதிரான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தொடர் தோல்விகளால் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளது.

29ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்து பெண்கள் அணியுடன் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
ஏப்ரல் 3, 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது. இதில் இந்திய பெண்கள் அணியின் நட்சத்திர வீராங்கனையான பூனம் ராவட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தயாளன் ஹேமலதா அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்த் தொடருக்கான இந்திய பெண்கள் அணி;
மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீட் கவூர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமினாஹ் ரோடிகியூஸ், தயாளன் ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைதியா, ஜுலன் கோஸ்வாமி, சிக்கா பாண்டே, பூஜா வஸ்தர்கர், ஈக்ட பிஸ்த், பூனம் யாதவ், சுஸ்மா வெர்மா, ராஜேஸ்வரி கேயாக்வர்ட்.
இந்திய ஏ அணி;
தீப்தி ஷர்மா, ஜெமினாஹ் ரோட்ரிகுயூஸ், தேவிகா வைதியா, தயாளன் ஹேமலதா, ப்ரியா பூனியா, அனுஜா பட்டீல், மோனா மெஸ்ரம், சுகன்யா பரிதா, கவிதா பட்டீல், சாந்தி குமாரி, தனுஷ்ரி சர்கார், நுஸ்சத் பர்வீன், ரதா யாதவ், டி. பி கனவார்.