பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி 1

பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி ,இந்தியா பெண்கள் என்றால் சும்மா விட்டு விடுவார்களா பத்திரிகையாளர்களை வெளுத்து வாங்கிட்டார்கள் அது என்னனு தெரியுமா இங்கே பாருங்கள்.

பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி 2

இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜிடம், உங்களுக்குப் பிடித்த ஆண் வீரர் யார் என்று கேட்ட பாகிஸ்தான் செய்தியாளர், மித்தாலியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மித்தாலி தலைமையிலான இந்திய மகளிர் அணி உலகக் கோப்பைப் போட்டிக்காக லண்டனில் முகாமிட்டுள்ளது. மித்தாலிக்கு இது நான்காவது உலகக் கோப்பைப் போட்டியாகும். கேப்டன் பதவியிலிரும், பேட்டிங்கிலும் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் மித்தாலி.

பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி 3

100 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து புதிய சாதனை படைத்தவர். சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்த 3வது வீராங்கனை மித்தாலி. புத்திசாலி கேப்டன், திறமையான வீராங்கனை.

இந்த நிலையில் லண்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் அணிகளுக்கான இரவு விருந்தின்போது மித்தாலியிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் பாகிஸ்தான செய்தியாளர் ஒருவர்.

பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி 4

அந்த செய்தியாளர் தேவையில்லாமல் ஆண் வீரர்களையும், பெண் வீராங்கனைகளையும் ஒப்பிட்டுப் பேசி கேள்வி கேட்டார். கேள்வியின்போது உங்களுக்குப் பிடித்த இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் யார் என்றும் கேட்டார். இதைக் கேட்டு முகம் சுளித்தார் மித்தாலி.

 

அந்த செய்தியாளரிடம், இதே கேள்வியை ஒரு வீரரிடம் நீங்க கேட்க முடியுமா. யார் உங்களுக்குப் பிடித்த பெண் வீராங்கனை என்று கேட்க முடியுமா. ஏன் இதை எங்களிடம் மட்டும் கேட்கிறீர்கள் என்று கோபமாகவே கேட்டார்.

பத்திரிகையாளர்களின் வாயை அடைந்த இந்திய மகிளிர் கேப்டன் மித்தாலி 5

 

தொடர்ந்து பேசிய மித்தாலி, இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலுமே பெண்கள் கிரிக்கெட்டுக்கு சற்று மவுசு குறைவாகவே உள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட்டுக்குத் தேவையானதை செய்து வருகிறது. அது பாராட்டுக்குரியது என்றாரி மித்தாலி.

இந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் ஜூன் 24 இல் துவங்கி ஜூலை மாதம் 23இல் முடிவிற்கு வருகிறது.இந்த முறை உலக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி பெண்கள் மிகவும் தயார்நிலையில் உள்ளார்கள்.

ஜூலை 2ஆம் தேதியில் இந்தியா பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோத உள்ளது இதனால் இந்த போட்டி மிகவும் எதிர் பார்க்க படும் பொடியாகும் மேலும் இந்த போட்டியில் சிறிதும் காரம் குறையாமல் விறுவிறுப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதினாலே அது இரண்டு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

தற்போது மகளிர் உலக கோப்பையில் விளையாட போகும் இந்திய மகளிர்கள் இவர்கள் தான்.

இந்திய மகளிர் அணி :

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மான்ப்ரீட் கவுர், வேத கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம் , பூனம் ராட், தீப்தி சர்மா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, ஒற்றுமை பிஷ்ட், சுஷ்மா வர்மா, மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி , பூனம் யாதவ், நுஸ்ட் பர்வீன், ஸ்ம்ரிதி மந்தனா

இந்த அணியை வைத்து இந்திய மகளிர் அணி இந்த முறை உலக கோப்பையை வெல்வர்களா ? தற்போது இருக்கும் மகளிர் அணிகளில் இந்திய மகளிர் அணி தான் வலுவாகவும் அதிக திறமைகளை உடையவர்களாவும் உள்ளார்கள் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இதனால் இந்த ஆண்டு நடைபெறும் மகளிர் அணி உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் மிகவும் விறு விருப்புடன் இருக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *