இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சிறுது நேரத்ம் இருந்திருந்தால் இலங்கை அணி விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்து மண்ணைக் கவ்வியிருக்கும். நல்ல வேளையாக சரியான வெளிச்சம் இல்லாமல் தப்பித்தது இலங்கை.
நாளை மறுநாள் (நவ்.24) இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் சிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவேனஷ்வட் குமார் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு மாற்று இந்திய அணியில் யார் என தற்போது பார்ப்போம்.
1.முரளி விஜய்
டெஸ்ட் அணியில் பிரதான துவக்க வீரராக இருந்த விஜய் காயம் காரனமாக விலகிய நேரத்தில் அந்த இடத்தை கெட்டியா பிடித்துக் கொண்டார் சிகர் தவான். தற்போது மீண்டும் தனது சொந்த வேலைகளுக்காக விடுப்பு எடுத்துள்ள தவானிற்கு பதிலாக அணியில் துவக்க வீரராக முரளி விஜய் களம் காணுவார்.