நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
என்னதான் சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் ஒருசில பிரச்சனைகள் இன் சென்னை அணி நிலவி வருகிறது குறிப்பாக சென்னை அணியில் ஆல்ரவுண்டர்களான மோயின் அலி, ஜடேஜா போன்ற வீரர்கள் சரியான முறையில் விளையாடவில்லை.
இதனால் சென்னை அணி எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மினி ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களை தனது அணியின் இணைக்கவேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுறை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் கிரிக்கெட் வல்லுனர்கள் பரிந்துரைக்கப்பட்ட 2 ஆல்ரவுண்டர்கள் குறித்து இங்கு காண்போம்.
பென் ஸ்டோக்ஸ்
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்தி தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிரடி காட்டும் திறமை படைத்த இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் தன்னுடைய பெயரை பதிவிடவில்லை.ஆனால் இவர் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போதைய சென்னை அணிக்கும் இவரை போன்ற ஒரு வீரர் தான் தேவை என்பதால் இவரை அணியில் இணைத்துக் கொள்ளலாம் என்று பலரும் சென்னை அணிக்கு அறிவுரை வழங்குகின்றனர்.