மற்ற ஐபிஎல் துவக்க விழாவை போல அல்லாமல் வருகின்ற ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்திற்கு முன்பு ராணுவ காலை நிகழ்ச்சி நாடா இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கிறது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய ஆயுதப்படைகளின் நலனுக்காக 20 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வழங்க முடிவு செய்தது. பயங்கரவாத தாக்குதலின் போது 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானிய பயங்கரவாதக் குழுவால் வெளிப்படையாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்திய ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் சிலர்அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போட்டியில் பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் 3 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

முந்தைய ஆண்டுகளில் போலல்லாமல், ஒரு விரிவான திறப்பு விழா இல்லை. போட்டிகளில் 8 கேப்டன்கள் பங்கேற்க உள்ளதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“CoA உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் நன்கொடையை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்,”என அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், அவர் தோனியும் ராணுவத்தில் தான் வகித்து வரும் பொறுப்பில் சிறப்பாக செயல்படுகிறார் என்றார் “முழுத் திட்டமும் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான முயற்சியாகும்,” என்று அவர் கூறினார்.
ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி வீரர்கள் , ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ உடை நிற தொப்பியை அணிந்து ஆடியது. வரும் ஆண்டுகளில், மேலும் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ராணுவ வீரர்களுக்கு மற்றும் அவர்களின் நலன்களுக்கு பல நண்கொடையை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரீமியர் லீக்கின் இந்த பதிப்பானது, நாட்டின் உலகக் கோப்பை அணியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என கருதப்படும் வீரர்களுக்கான ஒரு ஆயத்தமாக இருக்கும்.