பிசிசிஐ நினைத்தால் பத்தும் பணமாகும்! நிச்சயமாக ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி மிக சிறப்பாக நடத்தி முடிக்கும் - சல்மான் பட் நம்பிக்கை 1

ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கப்பட்டு ஐபிஎல் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அணியில் விளையாடிய வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று வந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்கப்படும் என்று பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து சென்ற ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடர் நடத்தியது போல, 20 நாட்களில் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வரை நடத்த இருக்கிறது. இந்நிலையில் பல வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க போவதில்லை என என செய்திகள் அடுத்தடுத்து வெளியாகின.

IPL 2021: 10 Big Players Who Might Not Be Available For The 2nd Leg

இதனால் பல இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பிசிசிஐ நிச்சயமாக சொன்னது போல் மிக சிறப்பாக மிகமுவா ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ என்ற படத்திற்கு மிகப்பெரிய பலம் உண்டு

பிசிசிஐ நாம் நினைப்பது போல் சாதாரண
நிர்வாகம் கிடையாது அதற்கு நிறைய பலம் இருக்கிறது. எனவே நிச்சயமாக வீரர்கள் எந்த நேரத்தில் பங்கேற்பாளர்களை இந்த நேரத்தில் ஒரு சிறந்த போட்டி அட்டவணையை அது நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் முடிந்த அளவு வீரர்களை விளையாட வைக்கவே பிசிசிஐ வலியுறுத்தும்.

அப்படி விளையாட முடியாத வீரர்களுக்கு ஏற்ப சில மாற்று வீரர்களை விளையாட வைக்கவும் பிசிசிஐ முடிவு எடுக்கும். நான் குறிப்பிட்டு இருந்தது போல் பிசிசிஐ நிர்வாகம் சாதாரண நிர்வாகமல்ல. எனவே நிச்சயமாக முடிந்தவரை மிக சிறப்பாக ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் நடத்தி முடிக்கும் என்று இறுதியாக சல்மான் பட் கூறி முடித்தார்.

Shakib Al Hasan, Mustafizur Rahman during IPL 2021

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு மேல் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 20 நாட்களில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே பிசிசிஐ திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரை எப்படி நடத்த போகிறது என்பதை காண ரசிகர்கள் தற்பொழுதிலிருந்தே மிக ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *