மீதமுள்ள ஐபிஎல் தொடர்களில் இவர் ஆடுவது மிக கடினம்! 1

பிசிசிஐ தற்பொழுது மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் துவங்கி அக்டோபர் மாதம் வரை நடத்த இருக்கிறது. அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஒரு மிகப் பெரிய தலைவலி எழுந்துள்ளது.

பிசிசி தற்போது புதிய தேதி அறிவித்த நிலையில், அந்த தேதியில் பல வீரர்கள் விளையாடாமல் போக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் விளையாட சுத்தமாக வாய்ப்பு இல்லை என்று வந்த தகவலைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் விளையாட போவதில்லை என்கிற செய்தி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Pat Cummins' career-best T20 innings earns him spot in elite list of  hitters in IPL | Sports News,The Indian Express

கால அட்டவணைகளில் சிக்கியுள்ள வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள்

முன்னர் கூறியது போல இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இங்கிலாந்து வீரர்களின் கால அட்டவணையை பொருத்தும் அவர்களது வருங்கால போட்டிகள் பொருத்தும், இடையே ஓய்வு அளிக்கப்படும். அப்படி அளிக்கப்படும் ஓய்வு அவர்களுடைய உடல் நலத்திற்காக மட்டுமே எனவே அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறியிருந்தது.

அதேபோல தற்போது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தில் உள்ள ஒருவர் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என்று கூறியுள்ளார். வருகிற ஜூன் மாத இறுதியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதன் பின்னர் உலக கோப்பை டி20 தொடர், அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்டன் அணைக்கு இடையே டெஸ்ட் போட்டி, இறுதியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து போட்டித் தொடர்கள் இருப்பதால் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

IPL 2020: Pat Cummins' maiden T20 fifty takes KKR to respectable 148 vs  Mumbai Indians | Cricket News – India TV

ஐபிஎல் தொடரை நினைத்தது போல் நடத்தி விட முடியுமா

இதனிடையே வெஸ்ட் இண்டீஸ்’இல் கரீபியன் பிரீமியர் லீக் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 19-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. எனவே அது முடிந்த பின்னர்தான் ஐபிஎல் தொடரை பிசிசிஐ செய்யும் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விளையாடமல் போனால் ஐபிஎல் தொடரில் சுவாரசியம் இருக்காது.

எனவே இப்படி அடுத்தடுத்து பிசிசிஐக்கு சவால் இருக்க ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி செப்டம்பர் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து எப்படி நடத்தப் போகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் பிசிசிஐ உள் வட்டார தகவல் படி நிச்சயமாக ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *