பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சம்பந்தமே இல்லாமல் ஆக்ரோஷமாக கத்தி கொண்டே இருந்த மும்பை வீரர் க்ரூணல் பாண்டியா சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
14வது ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி ரன் குவிக்கவும் தவறியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள், போட்டியின் முதல் ஓவரில் இருந்தே மும்பை வீரர்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர். குறிப்பாக மும்பை அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவின் ஓவரை குறி வைத்தே பஞ்சாப் வீரர்கள் ரன் குவிக்க துவங்கினர். க்ரூணல் பாண்டியாவின் ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டதால் செம கடுப்பான க்ரூணல் பாண்டியா சம்பந்தேமே இல்லாமல் இந்த போட்டியில் மிகுந்த ஆக்ரோஷமாக கத்தி கொண்டே இருந்தார்.

தனது மோசமான பந்துகளால் பவுண்டரி கொடுத்ததற்கு எல்லாம் க்ரூணல் பாண்டியா, பீல்டர்களை குறை சொல்லும் வகையில் அவர்களை நோக்கி கத்தி கொண்டே இருந்தார். க்ரூணல் பாண்டியாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
க்ரூணல் பாண்டியா இது போன்ற செயல்களை இனி வரும் போட்டிகளில் செய்யாமல் இருக்க வேண்டும் என கூறும் ரசிகர்கள், இந்த தொடரின் மிக மோசமான ஆட்டக்காரர் க்ரூணல் பாண்டியா தான் எனவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Nobody*
— BENIWAL ASTIC 💙 (@BeniwalAstic) April 23, 2021
Krunal Pandya blaming fielders for 2 back to back wide balls ! pic.twitter.com/gS9RM5ybFR
Expressions of krunal pandya after every ball are like, he’s bowling ‘The Ball of the century’ but every time it’s fault of fielders 😂#MI #IPL2021 pic.twitter.com/hSpuzrsnYc
— Prathmesh Patil🇮🇳 (@PrathmeshSpeak) April 24, 2021
Krunal Pandya to bowling coach after he gets hits for a boundary #PBKSvMI pic.twitter.com/1l4qZQOvsl
— saif shaikh (@saifs_99) April 23, 2021
Krunal pandya's every delivery is ball of the decade.
— Nitin//RCB❤️ (@Kohlliers) April 24, 2021
It's always fielders fault even if he gets hit for a six
Chapri player for a reason pic.twitter.com/6ptslb3JgM
Krunal Pandya blaming Umpire for 2 back to back No Ball pic.twitter.com/ouxFV1hGnE
— Sumantra Kumar Das (@SumantraKumarDa) April 24, 2021
Nobody
— Mayur Lohia (@lohia_mayur) April 24, 2021
Absolutely Nobody
Krunal Pandya to Fielders even before the ball is bowled:#MIvsPBKS #Krunalpandya #IPL2021 pic.twitter.com/87nOOT63ix
Krunal Pandya blaming the batsman for hitting back to back sixes in his bowling. #RRvKKR #IPL2021 #rrvskkrdream11 pic.twitter.com/F1CNTyCvn4
— Nekraj Bhartiya ExpertFreeTips (@expertfreetips) April 24, 2021
Krunal Pandya in IPL 2020 – scored 109 runs with avg of 18 and SR. 118 and took 6 wickets with avg of 63😨
— SHUBHAM (@RohitianShubham) April 21, 2021
In 2021, so far in 4 matches he scored 26 runs and has taken just 3 wickets in CHEPAUK 🤣+ his attitude🤮
Surely youngsters like Anukul Roy should be given a chance IMO pic.twitter.com/jc2RmieI4Q